வெள்ளக்கோவிலில் கடையின் பூட்டை உடைத்துப் பணம் திருடப்பட்டுள்ளது.
முத்தூர் சாலை, கொங்கு நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (37). இவர், டி.ஆர்.நகரில் வட்டிக் கடை வைத்துள்ளார். திங்கள்கிழமை மதியம் கடையின் கண்ணாடிக் கதவை மட்டும் பூட்டிவிட்டு சாப்பிடச் சென்றுள்ளார்.
பின்ன மாலை 4 மணிக்கு மீண்டும் கடைக்கு வந்து பார்த்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு, கண்ணாடிக் கதவு திறந்துகிடந்தது. உள்ளே மேஜையின் இழுப்பறையும் உடைக்கப்பட்டு, அதில் இருந்த ரூ. 80 ஆயிரம் திருட்டுப் போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வெள்ளக்கோவில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.