முதுகலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம், உடுமலை எஸ்.கே.பி. மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில் உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த முதுகலை ஆசிரியர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எஸ்.சாந்தி தலைமை வகித்தார்.
திருப்பூர் மாவட்டக் கல்வி அலுவலர் ஆர்.விஜயலட்சுமி வாழ்த்துரை வழங்கினார்.
முன்னதாக எஸ்.கே.பி. பள்ளி தலைமை ஆசிரியர் கே.டி.பூரணி அனைவரையும் வரவேற்றார்.