காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும், திருப்பூரில் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
திருப்பூர் குமரன் நினைவுப் பூங்கா முன்பு நடைபெற்ற இப்போராட்டத்தில் திருப்பூர் செல்லம் நகர், சாமுண்டிபுரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்றனர்.
உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.