காங்கயம் நகராட்சிக்கு உள்பட்ட திருவள்ளுவர் வீதியில் சாக்கடைக் கால்வாய் அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காங்கயம் பேருந்து நிலையம் அருகே உள்ள திருவள்ளுவர் வீதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் செல்வதற்கு கால்வாய் வசதி இல்லாததால், அப்பகுதியில் குளம் போல தேங்கி நின்று, சுகாதார சீர்கேட்டினை ஏற்படுத்தி வருகிறது.
எனவே, பொதுமக்களின் சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டு, கழிவு நீர் செல்வதற்கு இப்பகுதியில்
சாக்கடைக் கால்வாய் அமைப்பதற்கு நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.