அவிநாசி அருகே வீடு புகுந்து திருடியவருக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதித்து நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.
கோவை, ரத்தினபுரியைச் சேர்ந்தவர் சாம்ராஜ் (40). இவர், அவிநாசி அருகே சின்னேரிபாளையத்தில் வைஷ்ணவி கார்டன் பகுதியைச் சேர்ந்த வடிவேல் என்பவரது வீட்டிற்குள் புகுந்து 3 பவுன் நகைகளை திருடிச் சென்றுள்ளார்.இது குறித்து அவிநாசி போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இவ்வழக்கு விசாரணை அவிநாசி குற்றவியல் நீதித் துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி பாரதிபிரபா தலைமையில் நடைபெற்றது வந்தது.
இவ்வழக்கில், சாம்ராஜுக்கு ஓராண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது.