வெள்ளக்கோவில் அருகே நடந்த சாலை விபத்தில் நூற்பாலைத் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தார்.
திருச்சியைச் சேர்ந்தவர் விஜய் (19). இவர் வெள்ளக்கோவிலிலுள்ள ஒரு தனியார் நூற்பாலையில் தங்கியிருந்து அங்கேயே வேலை செய்து வந்தார்.
இவர் காங்கயம் சாலையிலுள்ள ஒரு தனியார் பள்ளி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற போது, நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் அடிபட்ட அவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து வெள்ளக்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.