திருப்பூர், செட்டிபாளையம் பிரிவு அலுவலகத்துக்கு உள்பட்ட மின் நுகர்வோர் நவம்பர் மாத கட்டணத்தையே மின்கட்டணமாக செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருப்பூர் மின்வாரிய செயற்பொறியாளர் சந்திரசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கை:
திருப்பூர், செட்டிபாளையம் பிரிவு அலுவலகத்துக்கு உள்பட்ட டி.ஸ்.கே. மரகதம் லேஅவுட், திருக்குமரன் நகர், வள்ளலார் நகர், அம்மன் நகர், அமராவதி நகர், மூகாம்பிகை நகர், பழவஞ்சிபாளையம், லட்சுமி நகர், நேதாஜி நகர், கே.எஸ்.நகர், டீச்சர்ஸ் காலனி, வேலன் நகர், குரம்ப குட்டை, சீனிவாசா நகர், ஐஸ்வர்யா நகர், அப்பாவு நகர், பூங்கா நகர், சபரி நகர், எம்.ஜி.ஆர்.நகர், வி.பி.ஜி.நகர், வஞ்சி நகர், திருமூர்த்தி நகர் ஆகிய பகுதிகளில் நிர்வாக காரணங்களால் இம்மாதத்துக்கான மின் கட்டண கணக்கீடு செய்ய இயலவில்லை. எனவே, மின் நுகர்வோர் முந்தைய நவம்பர் மாத கணக்கீட்டுக்கான கட்டணத்தையே செலுத்தி, மின் துண்டிப்பை தவிர்க்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.