பல்லடத்தில் ஓய்வூதியர் தின விழா

மூத்த குடிமக்கள் மற்றும் பென்ஷனர்கள் கூட்டமைப்பின் சார்பில் ஓய்வூதியர்கள் தினவிழா பல்லடத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. 

மூத்த குடிமக்கள் மற்றும் பென்ஷனர்கள் கூட்டமைப்பின் சார்பில் ஓய்வூதியர்கள் தினவிழா பல்லடத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. 
விழாவுக்கு,  பென்சனர்கள் கூட்டமைப்பின் பல்லடம் வட்டாரத் தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் வேலுசாமி,  மாநில பிரதிநிதி ஆறுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைச் செயலாளர் முருகசாமி வரவேற்றார். 
விழாவில் கடந்த ஆண்டுக்கான திருத்தி அமைக்கப்பட்ட ஓய்வூதியத் தொகை வழங்குதல், மாத மருத்துவபடியாக ரூ. 1,000 நிர்ணயித்தல்,  ஓய்வூதியதாரார்,  குடும்ப ஓய்வூதியதாரார்களுக்கு ஜனவரி 2016-க்கு முந்தைய திருத்தி அமைக்கப்பட்ட ஓய்வூதியத் தொகையை வழங்க அனுமதிக்க வேண்டும். குறைந்த பட்ச பென்ஷன் தொகையாக ரூ. 9 ஆயிரம்  நிர்ணயிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. இதில்,  மாநில,  மாவட்ட,  வட்டார நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். வட்டார செயலாளர் பொன்னுசாமி நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com