அருள்புரம் ஜெயந்தி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழாவையொட்டி "ஏ.பி.ஜே. விஷன்- 2020' அமைப்பு சார்பில் ஆள் இல்லாத விமானம் பறக்கும் விதம், ரோபோ, ஏவுகணை செயல்பாடு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது .
இதில் பள்ளி முதல்வர் சுரேஷ்நாதன், குழு தலைவர் விஜய் ராஜ்குமார், பொறியாளர்கள் மனோ ராஜகோபால், மணிவேல், எடிசன் உள்பட பலர் பங்கேற்றனர்.