அவிநாசி தொகுதிக்கு உள்பட்ட வாக்குச் சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் அவிநாசியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு பாஜக மாவட்டத் தலைவர் ஆர்.சின்னசாமி தலைமை வகித்தார். மாவட்டப் பொதுச் செயலாளர் செந்தில் சண்முகசுந்தரம், மாவட்டச் செயலாளர்கள் ஏ.கே.சண்முகம், தர்மலிங்கம், அவிநாசி சட்டப் பேரவைத் தொகுதிப் பொறுப்பாளர்கள் கதிர்வேல், நந்தகுமார், பிற்படுத்தப்பட்டோர் அணி பாபாஸ் பாபு, கோட்ட இணைப் பொறுப்பாளர் பாயிண்ட் மணி, அமைப்புச் செயலர் பாலகுமார், நீலகிரி மக்களவைத் தொகுதிப் பொறுப்பாளர் சண்முகம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இதில், மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வது, பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்ட பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஒன்றியத் தலைவர் கணேசன் நன்றி கூறினார்.