வாக்குச் சாவடிக்கு அருகே சாலையில் எல்லைக்கோடு வரையும் பணி காங்கயத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு வியாழக்கிழமை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு வாக்குச் சாவடிக்கு அருகே பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதைக் குறிப்பிடும் வகையில் சாலையில் எல்லைக்கோடு வரையும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
காங்கயம் நகர பகுதிகளில் உள்ள வாக்குச் சாவடி மையங்களுக்கு அருகே சாலையில் எல்லைக்கோடு வரையும் பணியை காங்கயம் நகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டனர்.