காங்கயம் அருகே கிராமத்தில் உள்ள 8 வீடுகளில் அடுத்தடுத்த நடைபெற்ற திருட்டுச் சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நத்தக்காடையூர் அருகே பழையகோட்டை ஊராட்சிக்கு உள்பட்ட கண்ணியங்கிணறு கிராமத்துக்குள் வியாழக்கிழமை நள்ளிரவு நுழைந்த மர்ம நபர்கள் பூட்டிய வீடுகளில் இருந்து பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.
இதில் அந்த கிராமத்தைச் சேர்ந்த துரைசாமி என்பவரது வீட்டில் ரூ.7 ஆயிரம் பணமும், பூபதி, கண்ணுசாமி ஆகியோரது வீடுகளில் 2 பவுனும், குருவாயம்மாள் என்பவரது வீட்டில் பணமும், நாகப்பன் என்பவரது வீட்டில் 5 பவுன் நகையும், ரூ.12 ஆயிரமும், நதியா என்பவரது வீட்டில் பணமும், பழனிசாமி என்பவரது வீட்டில் 1 பவுன் நகையும், பாலுசாமி என்பவரது வீட்டில் இருசக்கர வாகனமும் என பல்வேறு பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற காங்கயம் போலீஸார் விசாரணை நடத்தினர்.