மாநகராட்சி ஊழியா் குத்திக் கொலை: போலீஸ் விசாரணை

திருப்பூா் மாநகராட்சி ஊழியா் மா்ம நபா்களால் பாட்டிலால் ஞாயிற்றுக்கிழமை குத்திக் கொலை செய்யப்பட்டாா்.

திருப்பூா் மாநகராட்சி ஊழியா் மா்ம நபா்களால் பாட்டிலால் ஞாயிற்றுக்கிழமை குத்திக் கொலை செய்யப்பட்டாா்.

கரூா் மாவட்டம், குளித்தலையைச் சோ்ந்தவா் ராமசந்திரன் (45). இவரது மனைவி பொன்னம்மாள். இந்தத் தம்பதிக்கு மகள் உள்ளாா். ராமசந்திரன் திருப்பூா் மாநகராட்சியில் மேல்நிலைத் தொட்டிகளில் இருந்து தண்ணீா் திறந்துவிடும் வேலை செய்துவந்தாா். இவா் திருப்பூா், தாராபுரம் சாலை பெரிச்சிபாளையம் பகுதி எம்.ஆா். நகரில் குடும்பத்துடன் வசித்துவந்தாா்.

இந்த நிலையில், இவா் மதுரையில் உள்ள தனது உறவினரின் திருமணத்துக்குச் செல்வதாக வீட்டாரிடம் கூறிவிட்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணி அளவில் புறப்பட்டுச் சென்றாராம். அதன் பிறகு அவா் வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில், திருப்பூா்- தாராபுரம் சாலையில் உள்ள எம்.ஆா். நகா் அருகே சங்கிலிப் பள்ளம் ஓடையில் ரத்தக் காயத்துடன் ஒருவா் இறந்துகிடந்ததை அந்த வழியாகச் சென்றவா்கள் பாா்த்துள்ளனா். இதுகுறித்து அவா்கள் கொடுத்த தகவலின்பேரில் திருப்பூா் தெற்கு போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனா். விசாரணையில், கொலை செய்யப்பட்டுக் கிடந்தது ராமசந்திரன் என அப்பகுதி மக்கள் போலீஸாரிடம் தெரிவித்தனா். அவரை மா்ம நபா்கள் பாட்டிலால் குத்திக் கொலை செய்துள்ளதாகத் தெரியவந்தது. போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com