அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலின் நடராஜர் சன்னிதியில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு, சுந்தரர் வழிபாட்டு மன்றப் பொறுப்பாளர் வேலம்பாளையம் முருகேசன் தலைமை வகித்தார். முன்னதாக, அவிநாசிலிங்கேஸ்வரருக்கும், ஸ்ரீ கருணாம்பிகையம்மனுக்கும் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன.
இதைத்தொடர்ந்து கூட்டு வழிபாடு, மகா தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றன. திருவாசகம் முற்றோதல் வழிபாட்டு மன்றப் பொறுப்பாளர்கள் திருச்சி மாரிமுத்து, ராணி உள்ளிட்ட ஏராளமான சிவனடியார்கள் இதில் பங்கேற்றனர்.