வஞ்சிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை(ஜூன் 19) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அவிநாசி மின் வாரியத்தினர் அறிவித்துள்ளனர்.
மின்விநியோகம் தடைபடும் பகுதிகள்:
வஞ்சிபாளையம், வெங்கமேடு, சாமந்தங்கோட்டை, செம்மாண்டம்பாளையம், புதூர், கோதபாளையம், சோளிபாளையம், கணியாம்பூண்டி, வலையபாளையம், அனந்தாபுரம், முருகம்பாளையம்.