திருப்பூர்
பள்ளி மாணவர்களுக்கு இலவச டியூஷன் வகுப்பு
வெள்ளக்கோவிலில் சமூக நல ஆர்வலர்களால் பள்ளி மாணவர்களுக்கு இலவச டியூஷன் வகுப்பு திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
வெள்ளக்கோவிலில் சமூக நல ஆர்வலர்களால் பள்ளி மாணவர்களுக்கு இலவச டியூஷன் வகுப்பு திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
வெள்ளக்கோவில் பழைய பேருந்து நிலையம் அருகே கே.பி.சி. நகரில்இந்த மாலை நேர வகுப்பினை தன்னார்வலர் கே.ஜி.நட்ராஜ் துவக்கி வைத்தார். 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை அரசு, தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இங்கு இலவச மாலை நேர வகுப்புகள் நடைபெறுகிறது.
தற்போது முதல்கட்டமாக 30 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். தனியார் பள்ளியைச் சேர்ந்த சம்பூர்ணம், கற்பகம் ஆகியோர் ஆசிரியைகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.