திருப்பூரில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 99 சதவீத தேர்ச்சி பெற்ற கருவம்பாளையம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
திருப்பூர், கருவம்பாளையத்தில் உள்ள மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் 2018-2019 ஆம் கல்வியாண்டில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 99 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர்.
இதைத் தொடர்ந்து பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் முதல் மூன்று இடம் மற்றும் பாடவாரியாக முதலிடங்களைப் பிடித்த மாணவர்களுக்குப் பாராட்டு விழா கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ச.பழனிசாமி தலைமை வகித்தார். இதில், மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் கணேஷ்வரி, தலைமை ஆசிரியர் குமரன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.