பாரதிய ஜனதா கட்சியின் வெள்ளக்கோவில் நகரத் தலைவர் பி.கார்த்திகேயன் அப்பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அக்கட்சியின் திருப்பூர் தெற்கு மாவட்டத் தலைவர் பி.ருத்ரகுமார் விடுத்துள்ள செய்திக் குறிப்பில்,
பாரதிய ஜனதா கட்சியின் திருப்பூர் தெற்கு மாவட்டம் காங்கயம் சட்டமன்றத் தொகுதிக்குள்பட்ட வெள்ளக்கோவில் நகரத் தலைவராக பி.கார்த்திகேயன் பதவி வகித்து வந்தார். அவர் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட காரணத்துக்காக கட்சியின் மாவட்ட மையக்குழு முடிவின்படி அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி மோசடி மற்றும் பாலியல் குற்றச்சாட்டின் பேரில் வெள்ளக்கோவில் நகரத் தலைவர் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.