சிவன்மலை, ஆலாம்பாடி
காங்கயம், மே 3: காங்கயம் மின் கோட்டம் சிவன்மலை, ஆலாம்பாடி ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உள்பட்ட தொட்டியபட்டி, கல்லேரி பகுதிகளில் உள்ள உயர் மின்னழுத்தப் பாதையில், மின் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற உள்ளன.
இதனால் சிவன்மலை, அரசம்பாளையம், படியூர், சாவடிபாளையம், தம்மரெட்டிபாளையம், ஒட்டபாளையம், நல்லிபாளையம், கீரனூர், வேலாயுதம்பாளையம், நால்ரோடு, மரவபாளையம், சாவடி, பூமாண்டவலசு, பரஞ்சேர்வழி ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை (மே 4) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
இத்தகவலை மின்வாரிய காங்கயம் கோட்ட செயற்பொறியாளர் எம்.மருதாச்சலமூர்த்தி தெரிவித்துள்ளார்.
உடுமலையில்...
உடுமலை அருகே உள்ள பாலப்பம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் உடுமலை நகர் பகுதிகளில் சனிக்கிழமை (மே 4) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி உடுமலை காந்தி நகர், அண்ணா குடியிருப்பு, காந்தி சவுக், குட்டைத் திடல், நேரு வீதி, நகராட்சி அலுவலகம், பார்க், ரயில் நிலையம், காவலர் குடியிருப்பு, தளி ரோடு, சந்தை, மினி மார்க்கெட், எஸ்.வி.புரம், பாலப்பம்பட்டி, மைவாடி, கண்ணமநாயக்கனூர், குரல் குட்டை, மடத்தூர், மலையாண்டிபட்டிணம், மருள்பட்டி, உரல்பட்டி, சாளரப்பட்டி, பாப்பான்குளம், சாமராயபட்டி, பெருமாள்புதூர், குமரலிங்கம், கொழுமம், ருத்ராபாளையம், வீர சோழபுரம் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.