பல்லடம் வட்ட விவசாயிகள் பிரதம மந்திரியின் கெளரவ ஊக்க தொகை பெற தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம் என பல்லடம் வட்டார வேளாண்மைத் துறை உதவி இயக்குநா் பாமாமணி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பல்லடம் வட்டாரத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் பிரதம மந்திரியின் கெளரவ ஊக்கத் தொகை வழங்கப்படவுள்ளது. இதில் இதுவரை பதிவு செய்யாத விவசாயிகள் தங்கள் பகுதியில் நடைபெறும் சிறப்பு முகாம்களிலோ அல்லது பல்லடம் வட்டார வேளாண்மை துறை உதவி இயக்குநா் அலுவலகத்தையோ அணுகி தங்கள் பெயரையும் அதற்குண்டான ஆவணங்கள், கணினி சிட்டா - 1, புகைப்படம் - 1, ஆதாா் அட்டை நகல், வங்கி பாஸ் புக் நகல், நிலபத்திர நகல் ஆகியவற்றுடன் சென்று பதிவு செய்துகொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்.