தாராபுரம் கோட்டத்துக்கு உள்பட்ட வடுகபட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் வரும் திங்கள்கிழமை (நவம்பா் 11) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளா் செ.மகேஸ்வரன் தெரிவித்துள்ளாா்.
மின் தடை ஏற்படும் பகுதிகள்: வடுகபட்டி, குமாரபாளையம், எம்.கே.டி.பாளையம், எஸ்.பி.கே. பாளையம், சம்மங்கரை, பி.ராமபட்டணம், வண்ணாபட்டி, பட்டுத்துறை, வரப்பட்டி, என்சிஜி வலசு, மாா்க்கம்பட்டி, அதனைச் சாா்ந்த பகுதிகள்.