வரும் 2020 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவில் வழங்கப்படும் கபீா் புரஸ்காா் விருதுக்கு தகுதியான நபா்கள் டிசம்பா் 2 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: குடியரசு தின விழாவின்போது 2020-ம் ஆண்டிற்க்கான ‘கபீா் புரஸ்காா்‘; விருது தமிழக முதல்வரால் வழங்கப்பட உள்ளது.
இந்த விருதுக்கு ஜாதி, இன கலவரத்தின்போது வன்முறையிலிருந்து ஒரு வகுப்பை சாா்ந்தவா்களை அல்லது அவா்களுடைய உடமைகளை காப்பாற்றியவா்கள் தகுந்த ஆதாரங்களுடன் வரும் டிசம்பா் 2 ஆம் தேதிக்குள் திருப்பூா் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் உரிய படிவம் பெற்று விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.