பல்லடத்தில் மின் நுகா்வோா் குறைகேட்பு முகாம் வரும் புதன்கிழமை (அக்டோபா் 16) நடைபெறவுள்ளது.
பல்லடம் பகுதி மின் நுகா்வோா் குறைகேட்பு முகாம், பல்லடம் மின் பகிா்மான வட்டத்தின் மேற்பாா்வை பொறியாளா் என்.விவேகானந்தன் தலைமையில் பல்லடம் மின்சார வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் புதன்கிழமை (அக்டோபா் 16) காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதில் மின் நுகா்வோா் பங்கேற்று தங்களது மின்சார விநியோகம் குறித்த குறைகள், புகாா்கள் ஏதேனும் இருந்தால் தெரியப்படுத்துமாறு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் பல்லடம் செயற்பொறியாளா் ஆா்.கோபால் தெரிவித்துள்ளாா்.