பணப் பட்டுவாடாவை தடுக்க 17, 18 ஆம் தேதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும்: ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி

மக்களவைத் தேர்தலையொட்டி வாக்களார்களுக்குப் பணப் பட்டுவாடா செய்வதை தடுக்க ஏப்ரல் 17, 18 ஆகிய

மக்களவைத் தேர்தலையொட்டி வாக்களார்களுக்குப் பணப் பட்டுவாடா செய்வதை தடுக்க ஏப்ரல் 17, 18 ஆகிய நாள்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை அவர் கூறியதாவது:
திருப்பூர் மக்களவைத் தொகுதியில் 1,704  வாக்குச் சாவடிகளில் 560 வாக்குச் சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கண்காணிப்புப் பணியை மேற்கொள்ள 325 நுண் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல, தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக மாவட்டத்தில்  216 சிஆர்பிஎப், 70 சிஆர்ஏஎப், 140 எஸ்.ஏ.எப், 315 டிஎஸ்பி என 741 பேர்கள் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பார்வையற்ற வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக 80 பிரெய்லி முறையிலான வாக்காளர் அடையாள அட்டைகள் தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. அதேபோல், பிரெய்லி முறையிலான 568 வாக்காளர் சீட்டுகள் பெறப்பட்டு விநியோகம் செய்யப்பட உள்ளன.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை வாக்குச் சாவடிகளுக்கு எடுத்துச் செல்லும் வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு வாகனங்கள் கண்காணிக்கப்பட உள்ளது. தேர்தல் நாளில் வாக்குச் சாவடிகளில் வாக்களிக்க வரும் மாற்றுத் திறனாளிகள், முதியோர்கள், கர்ப்பிணிகள் மற்றும் கைக் குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள் ஆகியோருக்கு வாக்காளிக்க முன்னுரிமை அளிக்க  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு 18 ஆம் தேதி மாலை 6 மணி வரை பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு ஆகியவை செயல்படும். தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபடவும், தேர்தல் விதிமுறைகள் மீறல்கள் தொடர்பாக பெறப்படும் புகார்கள் குறித்து தணிக்கை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளவும் உள்ளனர்.
திருப்பூர் எல்.ஆர். ஜி. கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு 24 மணி நேரமும் பாதுகாப்புப் பலப்படுத்தப்படும். மேலும் கடைசி இரண்டு நாள்களில் பணப்பட்டுவாடாவை தடுக்க பறக்கும் படை, நிலைக் குழுக்கள் ஆகியோர் 18 ஆம் தேதி மாலை 6 மணி வரை தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவார்கள். 
இதில் ஏப்ரல் 17 மற்றும் 18 ஆகிய நாள்கள் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் 1 முதல் 5 மையங்களில் முழுக்க முழுக்க பெண்களே நடத்தும் வகையில் சிறப்பு வாக்குச் சாவடிகளும் அமைக்கப்பட உள்ளன என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com