காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடி சஷ்டி மற்றும் அன்னதான விழா செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 6) நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு, சிவன்மலை மீது வீற்றிருக்கும் வள்ளிநாயகி தேவசேனா உடனமர் சுப்பிரமணிய சுவாமிக்கு செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு சிறப்பு வழிபாடும், சுவாமி திருவீதியுலா காட்சியும் நடைபெறுகிறது.
பின்னர் பகல் 12 மணியளவில் மலைக் கோயிலில் உள்ள அன்னதான மண்டபத்தில் காலை 7 மணிக்கு துவங்கி பக்தர்களின் வருகைக்கு ஏற்ப பகல் முழுவதும் அன்னதானமும் நடைபெறவுள்ளது.
சஷ்டி விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத் துறை திருப்பூர் உதவி ஆணையர் ரெ.சா.வெங்கடேஷ், சிவன்மலை உதவி ஆணையர் எம்.கண்ணதாசன் ஆகியோர் தலைமையில் கோயில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.