வெள்ளக்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை 10 டன் முருங்கைக்காய் வரத்து இருந்தது.
இங்கு வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை முத்தூர் சாலையில் செயல்பட்டு வரும் தனியார் கொள்முதல் மையத்தில் முருங்கைக் காய்கள் வாங்கப்படுகின்றன. சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த விவசாயிகள் தங்களுடைய முருங்கைக் காய்களை இங்கு விற்பனைக்குக் கொண்டு வருகின்றனர்.
இந்த வாரம் 76 விவசாயிகள் மொத்தம் 10 டன் முருங்கைக் காய்களை கொண்டு வந்திருந்தனர். இவற்றை வாங்குவதற்காக 8 வியாபாரிகள் வந்திருந்தனர்.
இதில் மர முருங்கைக்காய் கிலோ ரூ.15, செடி முருங்கைக்காய் ரூ.20, கரும்பு முருங்கைக்காய் கிலோ ரூ.20 விலைக்கு வியாபாரிகள் வாங்கினர்.
கடந்த வாரம் 11 டன் வரத்து இருந்தது. இந்த வாரம் வரத்து குறைந்த நிலையில் விலை கிலோவுக்கு ஒரு ரூபாய் குறைந்தது.