திருப்பூர் கம்பன் கழகத்தின் 11ஆம் ஆண்டு கம்பன் விழா வரும் 25 ஆம் தேதி நடைபெறுகிறது.
திருப்பூர் கம்பன் கழகம் சார்பில் ஆண்டுதோறும் கம்பன் விழாவை நடத்தி வருகின்றனர். அதன்படி 11 ஆவது ஆண்டு கம்பன் விழா திருப்பூர் ஹார்வி குமாரசாமி திருமண மண்டபத்தில் வரும் 25 ஆம் தேதி நடைபெறுகிறது.
இதில், "கம்பன் காவியம் கற்போர் நெஞ்சை பெரிதும் கவர்வது- காதலின் கனிவில், வீரத்தின் வெற்றியில்' என்ற தலைப்பில சிறப்பு பட்டிமன்றம் நடைபெறுகிறது. பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் நடுவராக பங்கேற்கிறார். சென்னை தெய்வானை, தெய்வநாயகி, சண்முகம், அனுக்கிரகா ஆதிபகவன், ராஜ்குமார், தொலைக்காட்சி புகழ் கவிதா ஜவகர் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இதன் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், கல்லுôரி மாணவர்களுக்கான பேச்சு, கவிதை போட்டிகள் வரும் 22, 23ஆம் தேதிகளில் நடக்கிறது. டவுன்ஹால் அருகே உள்ள லயன்ஸ் கிளப் அரங்கில், நடக்கும் இப்போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் 93456-51066 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம் என கம்பன் கழக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.