பல்லடத்தில் மின் நுகர்வோர் குறைகேட்பு முகாம் வரும் 21ஆம் தேதி (புதன்கிழமை) நடைபெறவுள்ளது.
பல்லடம் பகுதி மின் நுகர்வோர் குறைகேட்பு முகாம் பல்லடம் மின் பகிர்மான வட்டத்தின் மேற்பார்வை பொறியாளர் கே.விவேகானந்தன் தலைமையில் பல்லடம் மின்சார வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் வரும் 21 ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் மின் நுகர்வோர் பங்கேற்று தங்களது குறைகள், புகார்களை தெரிவித்து பயன்பெறலாம்.
இத்தகவலை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் பல்லடம் செயற்பொறியாளர் ஆர்.கோபால் தெரிவித்துள்ளார்.