வெள்ளக்கோவில், முத்தூர் சாலையில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை செயல்பட்டு வரும் தனியார் கொள்முதல் மையத்தில் முருங்கைக் காய்கள் வாங்கப்படுகின்றன. இந்த வாரம் 150 விவசாயிகளால் மொத்தம் 24 டன் முருங்கைக் காய்கள் கொண்டு வரப்பட்டிருந்தன. இவற்றை வாங்குவதற்காக 9 வியாபாரிகள் வந்திருந்தனர். மர முருங்கைக் காய் கிலோ ரூ.18, செடி முருங்கைக் காய் ரூ.22, கரும்பு முருங்கைக் காய் கிலோ ரூ.24 விலைக்கு வியாபாரிகள் வாங்கினர். கடந்த வாரத்தை விட விலை கிலோவுக்கு ரூ.8 கூடியிருந்தது.