ரூ.40 லட்சம் மதிப்பிலான துணி மோசடி: ஒருவர் கைது: 13 டன் துணிகள், ரூ.1.45 லட்சம் பறிமுதல்

டையிங் நிறுவனம் நடத்துவதாகக் கூறி, திருப்பூரைச் சேர்ந்தவரிடம் ரூ.40 லட்சம் மதிப்பிலான 19 டன்

டையிங் நிறுவனம் நடத்துவதாகக் கூறி, திருப்பூரைச் சேர்ந்தவரிடம் ரூ.40 லட்சம் மதிப்பிலான 19 டன் துணிகளைப் பெற்று மோசடி செய்த நபரை திருப்பூர் மாநகர குற்றப் பிரிவு காவல் துறையினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். அவரிடமிருந்து 13 டன் துணிகள், ரூ.1.45 லட்சம் ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனர். 
இதுகுறித்து காவல் துறையினர் கூறியதாவது: 
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தைச் சேர்ந்தவர் வேலுஅழகன் (41). இவர் டையிங் நிறுவனம் நடத்துவதாகக் கூறி திருப்பூரைச் சேர்ந்த நமச்சிவாயம் என்பவரிடம் துணிகளை வாங்கியுள்ளார். பின்னர் அந்தத் துணிகளை டையிங் செய்து அவரிடம் கொடுத்து அதற்குரிய தொகையைப் பெற்றுச் சென்றுள்ளார்.
 இந்நிலையில் ஓராண்டுக்கு முன்னர் நமச்சிவாயத்திடம் இருந்து ரூ.40 லட்சம் மதிப்புள்ள 19 டன் துணிகளை டையிங் செய்வதற்காக வாங்கிச் சென்றார். ஆனால் அதன்பிறகு அந்தத் துணிகளை திருப்பிக் கொடுக்காமல் வேலுஅழகன் தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து, நமச்சிவாயம் விசாரித்தபோது, வேலுஅழகன் டையிங் நிறுவனம் நடத்தாமல் வெளியே கொடுத்து துணிகளை சாயமேற்றி திருப்பிக் கொடுத்து வந்ததும், ஒரு கட்டத்தில் அவரை ஏமாற்றிச் சென்றதும் தெரியவந்தது.
 இதுதொடர்பாக திருப்பூர் மாநகர குற்றப் பிரிவில் நமச்சிவாயம் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிந்த காவல் துறையினர் விசாரணை நடத்தி, தலைமறைவாக இருந்த வேலுஅழகனை வெள்ளிக்கிழமை கைது செய்தனர். அவரிடமிருந்து 13 டன் துணிகள், ரூ.1.45 லட்சம் ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com