உடுமலையை அடுத்துள்ள பாலப்பம்பட்டி ருத்ரவேணி முத்துசாமி பாலிடெக்னிக் கல்லூரியில் ஃபிட் இந்தியா திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகள் வெள்ளிக்கிழமை உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் எம்.கண்ணன் தலைமை வகித்தார். என்எஸ்எஸ் அலுவலர் ரகுபதி முன்னிலை வகித்தார்.
இதில் ஃபிட் இந்தியா மூவ்மெண்ட் என்ற திட்டத்தின்படி மாணவ, மாணவிகள் தங்களது உடல்திறனை மேம்படுத்தவும், உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்கவும் உறுதிமொழி
எடுத்துக் கொண்டனர். பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள்
நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.