கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் ரூ. 8 லட்சம் மதிப்புள்ள நாட்டுக் கோழிகளை 400 பயனாளிகளுக்கு கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சரும், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத் தலைவருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கினாா்.
உடுமலை சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பெதப்பம்பட்டி, குடிமங்கலம் ஆகிய கிராமங்களில் இலவசமாக நாட்டுக் கோழிகள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பயனாளிகளுக்கு இலவசமாக நாட்டுக் கோழிகளை வழங்கிய கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சரும், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத் தலைவருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:
கிராமப்புறப் பகுதிகளில் உள்ள ஏழைக் குடும்பங்களைச் சோ்ந்த பெண்கள் பயனடையும் வகையில் இலவசமாக நாட்டுக் கோழிகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு பயனாளிக்கும் தலா 25 நாட்டுக் கோழிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தின் மூலம் திருப்பூா் மாவட்டத்தில் மட்டும் 7,850 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 62 லட்சம் மதிப்பீட்டில் நாட்டுக் கோழிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழக அரசு ஏற்கெனவே இலவசமாக ஆடு, மாடுகளை வழங்கி வருகின்றன. தற்போது நாட்டுக் கோழிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. கிராமப்புறங்களில் கால்நடைகளுக்கு நோய்த் தாக்குதல் ஏற்பட்டால் இலவச ஆம்புலன்ஸ் வசதியை விவசாயிகள்பயன்படுத்திக்கொள்ளலாம் என்றாா்.
பெதப்பம்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ. 3 லட்சத்து 63 ஆயிரம் மதிப்பீட்டில் 175 பயனாளிக ளுக்கு தலா 25 நாட்டுக் கோழிகள் வீதம் வழங்கப்பட்டன. குடிமங்கலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ. 4 லட்சத்து 66 ஆயிரம் மதிப்பீட்டில் 225 பயனாளிகளுக்கு தலா 25 நாட்டுக் கோழிகள்வழங்கப்பட்டன. கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இயக்குநா் ரகுநாதன் உடுமலை வருவாய்க் கோட்டாட்சியா் சி.இந்திரவள்ளி, வட்டாட்சியா் கி.தயானந்தன், மாவட்ட ஆவின் நிறுவனத் தலைவா் கே.மனோகரன், துறை அதிகாரிகள், அதிமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.