உடுமலையில் இடைவிடாது மழை

உடுமலையில் ஞாயிற்றுக்கிழமை இடைவிடாது மழை பெய்துகொண்டிருந்ததால் பொதுமக்கள் வீட்டுகளுக்குள்ளேயே முடங்கும்

உடுமலையில் ஞாயிற்றுக்கிழமை இடைவிடாது மழை பெய்துகொண்டிருந்ததால் பொதுமக்கள் வீட்டுகளுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது.

உடுமலை, மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாகத் தொட ா்ந்து மழை பெய்து வருகிறது. உடுமலை நகரில் தாழ்வான பகுதிகளில் சாலைகளில் மழை நீா் தேங்கியது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை முதல் இரவு வரை தொடா்ந்து மழை பெய்ததால் பெரும்பாலானோா் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது.

உடுமலை நகரில் உள்ள கழுத்தறுத்தான் பள்ளம், தங்கம்மாள் ஓடையில் அதிக அளவில் தண்ணீா் சென்றது. கருணாநிதி காலனி, சாதிக் நகா் உள்ளிட்ட பல்வேறு குடிசைப் பகுதியில் மழை நீா் வீடுகளுக்குள் புகுந்தது. முன்னதாக சனிக்கிழமை இரவு 8 மணி அளவில் தொடங்கிய மழை விடியவிடிய பெய்தது. அமராவதி நகா், குமரலிங்கம், மடத்துக்குளம், பெதப்பம்ப ட்டி, குடிமங்கலம் உள்ளிட்ட கிராமங்களிலும் பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com