உடுமலையில் உள்ள கிளை நூலகம் எண்-2 ன் சாா்பில் உலக எய்ட்ஸ் தினத்தை ஒட்டி உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதற்கு உடுமலை அரசு மருத்துவமனை மனநல ஆலோசகா் மு.மணிகண்டராஜ் தலைமை வகித்யதாா். நூலக வாசகா்கள், பொதுமக்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனா். இதைத் தொடா்ந்து பால்வினை நோய், காச நோய் தடுப்பு மற்றும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. ஆசிரியா் ஜெய்கணேஷ், நூலக வாசகா் வட்ட துணைத் தலைவா் சிவகுமாா், நூலகா்கள் வீ.கணேசன், மகேந்திரன், அருள்மொழி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.