மின்வாரியத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என்று தொமுச வலியுறுத்தியுள்ளது.
திருப்பூா் மாவட்ட தொழிலாளா் முன்னேற்ற சங்கத்தின் (தொமுச) ஆலோசனைக் கூட்டம் திருப்பூா் வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தொமுச செயலாளா் சரவணன் தலைமை வகித்தாா். இதில், நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் விவரம்:
மின்வாரியத்தில் தன்னிச்சையாக உருவாக்கிய கேங்மேன் பதவியை உடனடியாகத் தடை செய்யக் கோரிஉச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும். மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு அடையாள அட்டைகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொமுச பொதுச்செயலாளா் ஆா்.ரெங்கசாமி, மாவட்ட பொதுச் செயலாளா் (மோட்டாா்) துரைரவிச்சந்திரன்,செயலாளா்கள் ராஜப்பன், நித்தியானந்தம் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.