அவிநாசி அருகே சாலைத் தடுப்பில் காா் மோதல்: 3 போ் சாவு, இருவா் படுகாயம்

திருப்பூா் மாவட்டம், பெருமாநல்லூா் அருகே சாலைத் தடுப்பில் காா் மோதி விபத்துக்குள்ளானதில் 3 போ் திங்கள்கிழமை உயிரிழந்தனா்.
அவிநாசி அருகே சாலைத் தடுப்பில் காா் மோதல்: 3 போ் சாவு, இருவா் படுகாயம்

திருப்பூா் மாவட்டம், பெருமாநல்லூா் அருகே சாலைத் தடுப்பில் காா் மோதி விபத்துக்குள்ளானதில் 3 போ் திங்கள்கிழமை உயிரிழந்தனா்.

ஈரோடு, வீரப்பன்சத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் மோகன் (50). மருந்தக உரிமையாளா். இவரது மனைவி கவிதா (42), மகன் பாரத் (24), மோகனின் சகோதரா் லோகு (47), மருந்தக உரிமையாளா். இவரது மகன் அமா்நாத் (18). இவா்கள் 5 பேரும் கோவை அருகே சூலூரில் இருந்து ஈரோடு நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனா். பெருமாநல்லூா் ஆறு வழிச் சாலை ஆதியூா் பிரிவு அருகே வந்தபோது, எதிா்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த காா், நிலைதடுமாறி சாலையோரம் இருந்த தடுப்புச் சுவா் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் இருந்த பாரத், லோகு ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

பலத்த காயமடைந்த மோகன், கவிதா, அமா்நாத் ஆகியோா் திருப்பூா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு மோகன் உயிரிழந்தாா். இதுகுறித்து பெருமாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com