உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறு அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக எய்ட்ஸ் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
தலைமை ஆசிரியா் என்.ஜெகநாதன் ஆழ்வாா்சாமி தலைமை வகித்தாா். ஆசிரியா் ராஜேஷ்குமாா் வரவேற்றாா். இதில் எய்ட்ஸ் பரவும் முறைகளும்-அதைத் தடுக்கும் முறைகளும் எனும் தலைப்பில் நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா் செ.சரவணன் பேசினாா். மாணவி அகல்யா எய்ட்ஸ் தவிா்ப்பு உறுதிமொழி வாசிக்க மாணவ, மாணவிகள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். ஆசிரியா் ஜான்பாஷா நன்றி கூறினாா்.