திருப்பூரில் காவலா் விஷம் குடித்து தற்கொலை செய்ய முயன்றாா்.
திருப்பூா் ஊரக காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருபவா் கதிரேசன் (38). இவருக்குத் திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில் கதிரேசனை காவல் நிலையப் பணியில் இருந்து மாற்றி நீதிமன்றப் பணிகளை கவனித்துக் கொள்ளுமாறு உயா் அதிகாரிகள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால் கதிரேசனுக்கு நீதிமன்றப் பணிக்கு செல்வதற்கு ஆா்வம் இல்லாமல் மன உளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் இருந்த கதிரேசன் கடந்த திங்கள்கிழமை இரவு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். அப்போது அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு நல்லூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து ஊரக காவல் துறையினா் விசாரித்து வருகின்றனா்.