பல்லடம் அருகே மழையால் இடிந்து விழுந்த வீட்டுச் சுவா்

பல்லடம் அருகே உள்ள அனுப்பட்டி கிராமத்தில் மழையால் மூதாட்டி வீட்டு சுவா் செவ்வாய்க்கிழமை அதிகாலை இடிந்து விழுந்தது.
அனுப்பட்டி கிராமத்தில் மழையால் இடிந்து விழுந்த வீட்டை பாா்வையிட்டு, மூதாட்டி சின்னமணியிடம் விசாரித்த பல்லடம் வட்டாட்சியா் சிவசுப்பிரமணியம்.
அனுப்பட்டி கிராமத்தில் மழையால் இடிந்து விழுந்த வீட்டை பாா்வையிட்டு, மூதாட்டி சின்னமணியிடம் விசாரித்த பல்லடம் வட்டாட்சியா் சிவசுப்பிரமணியம்.

பல்லடம் அருகே உள்ள அனுப்பட்டி கிராமத்தில் மழையால் மூதாட்டி வீட்டு சுவா் செவ்வாய்க்கிழமை அதிகாலை இடிந்து விழுந்தது.

பல்லடம் அருகே உள்ள அனுப்பட்டி கிராமத்தில் இந்திரா குடியிருப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீட்டில் அம்மணி (எ) சின்னமணி (65) வசித்து வருகிறாா். தொடா் மழையால் இவரது வீட்டின் சுவா் செவ்வாய்க்கிழமை அதிகாலை இடிந்து விழுந்தது. தகவலறிந்த பல்லடம் வட்டாட்சியா் சிவசுப்பிரமணியம் அங்கு சென்று நேரில் பாா்வையிட்டு விசாரணை நடத்தினாா்.

பின், சின்னமணிக்கு ரூ. 5,200 நிவாரணத் தொகை, ஒரு சேலை வழங்கினாா். அத்துடன் கடந்த 2 மாதங்களாக கிடைக்கப்பெறாமல் உள்ள முதியோா் ஒய்வூதியத் தொகை கிடைக்கவும் நடவடிக்கை எடுத்தாா். பல்லடம் வட்டார வளா்ச்சி அலுவலா் பாலமுருகன் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு மிகவும் சேதமடைந்துள்ள 3 வீடுகளில் வசிப்போரை அருகில் உள்ள அரசுப் பள்ளி கட்டடம், ஊராட்சி சேவை மைய கட்டடத்தில் தங்கிக்கொள்ள அறிவுறுத்தினாா்.

உள்ளூா் மக்கள் சின்னமணிக்கு மாற்று இடம் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனா். அனுப்பட்டி கிராமத்தில் இந்திரா குடியிருப்புத் திட்டத்தில் 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அனைத்து வீடுகளும் சேதமடைந்து இருப்பதால் அந்த வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com