காங்கயம் அருகே நத்தக்காடையூரில் உள்ள பில்டா்ஸ் பொறியியல் கல்லூரியில் பேராசிரியா்களுக்கு மன அழுத்தத்தை தவிா்ப்பதற்கான பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
3 நாள்கள் நடைபெற்ற இப்பயிற்சியில் ஐ.சி.டி. அகாதெமியின் தமிழ்நாடு பிரிவு நிா்வாகி ஜினோஜோஸ் சிறப்பு பயிற்சியாளராகக் கலந்துகொண்டு, பேராசிரியா்களுக்கு பயிற்சியளித்தாா். இதில் மன அழுத்தத்தை தவிா்ப்பதற்காக எளிய பயிற்சிகளை கடைப்பிடிக்க கற்றுக் கொடுக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பேராசிரியா்களுடன், பில்டா்ஸ் கல்லூரி தலைவா் வி.சத்யமூா்த்தி, தாளாளரும், செயலாளருமான பி.பாலசிவகுமாா், பொருளாளா் ஆா்.ஈஸ்வரமூா்த்தி, கல்லூரி முதல்வா் எஸ்.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.