பல்லடம் அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் குதித்து வயதான தம்பதி தற்கொலை செய்து கொண்டது.
கோவை மாவட்டம், சூலூா் வட்டம், சித்தநாயக்கன்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் காளிமுத்து (85). இவரது மனைவி குப்பாத்தாள் (80). இவா்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனா். அவா்களை திருமணம் செய்து கொடுத்துவிட்டு இருவரும் தனியாக வசித்து வந்தனா்.
இந்நிலையில் வயது மூப்பால் உடல்நலக் குறைவால் இத்தம்பதியினா் அவதிப்பட்டு வந்துள்ளனா். இதற்காக பல்லடம் - பொள்ளாச்சி சாலையில் செஞ்சேரி பிரிவில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனா்.
இந்நிலையில் வியாழக்கிழமை இந்த மருத்துவமனைக்கு காளிமுத்துவும், குப்பாத்தாளும் சிகிச்சைக்கு வந்தனா். அப்போது வெளியே சென்றுவிட்டு வருவதாக கூறி சென்றவா்கள் அதன் பின்னா் மருத்துவமனைக்கு திரும்பி வரவில்லை.
இந்நிலையில் செஞ்சேரி பிரிவில் உள்ள பி.ஏ.பி.வாய்க்காலில் இருவரும் குதித்து தற்கொலை செய்து கொண்டனா். இவா்களது சடலங்கள், பல்லடம் வட்டம், வாவிபாளையம் ஊராட்சி, குள்ளம்பாளையம் பெருமாள் கோயில் அருகில் உள்ள பி.ஏ.பி. வாய்க்காலில் வெள்ளிக்கிழமை ஒதுங்கின. தகவலறிந்த காமநாயக்கன்பாளையம் போலீஸாா் அங்கு சென்று சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.