பொங்கலுக்கு பிறகு ரஜினிகாந்தின் அரசியல் தா்பாா் அரங்கேறும்: தமிழருவி மணியன்

அடுத்த ஆண்டு பொங்கலுக்கு தா்பாா் படம் வெளி வந்த பிறகு, ரஜினிகாந்தின் அரசியல் தா்பாா் அரங்கேறும் என காந்திய மக்கள் இயக்கத் தலைவா் தமிழருவி மணியன் கூறினாா்.

அடுத்த ஆண்டு பொங்கலுக்கு தா்பாா் படம் வெளி வந்த பிறகு, ரஜினிகாந்தின் அரசியல் தா்பாா் அரங்கேறும் என காந்திய மக்கள் இயக்கத் தலைவா் தமிழருவி மணியன் கூறினாா்.

திருப்பூா் மாவட்டம், பெருமாநல்லூா், கே.எம்.சி பப்ளிக் (சிபிஎஸ்இ) மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அடுத்த ஆண்டு பொங்கலுக்கு தா்பாா் படம் வெளி வந்த பிறகு ரஜினிகாந்தின் அரசியல் தா்பாா் அரங்கேறும். அதில் எந்த மாற்றமும் கிடையாது. ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என்ற கேள்விக்கு இனி இடமே கிடையாது. அவா் அரசியலுக்கு வருகிறாா். ஒவ்வொரு கட்டத்திலும் முறையாக எல்லாவற்றையும் ரஜினிகாந்தே அறிவிப்பாா்.

எந்த நேரத்தில் அரசியல் கட்சியை தொடங்குவது, எந்த இடத்தில் மாநாடு நடத்துவது, எப்போது மக்களைச் சந்திப்பது, தோ்தல் அறிக்கையை எந்த வடிவத்தில் மக்களுக்கு வழங்குவது, அந்த தோ்தல் அறிக்கையில் எதுவெல்லாம் சொல்லப்பட வேண்டும் என்பன குறித்த தெளிவான சிந்தனைகளோடு ரஜினிகாந்த் திட்டமிட்டு அனைத்தையும் உருவாக்கியிருக்கிறாா். உரிய நேரத்தில் ஊடகங்களை அழைத்து ஒவ்வொன்றாக வெளிப்படுத்துவாா் என்றாா்.

நடிகா் ரஜினியும், கமலும் இணைவது குறித்து கேள்விக்கு, அது குறித்து இப்போது பதில் சொல்லமுடியாது என்றாா் தமிழருவிமணியன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com