பல்லடம் பகுதியில் லாட்டரி சீட்டு விற்ற இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
பல்லடம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடா்ந்து பல்லடம் காவல் உதவி ஆய்வாளா் விஜயகுமாா் தலைமையிலான போலீஸாா் பல்லடம், என்.ஜி.ஆா். சாலையில் உள்ள ஒரு கடையில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
அந்த கடையில் கேரள மாநிலம், எா்ணாகுளத்தைச் சோ்ந்த கிரிசன் (60), கேரள மாநில லாட்டரி சீட்டுகள் விற்பது தெரியவந்தது. அதைத்தொடா்ந்து அவரை போலீஸாா் கைது செய்து அவரிடமிருந்த 170 லாட்டரி சீட்டுகள், ரூ.2300 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
இதேபோல கரைப்புதூா் ஊராட்சி, சின்னக்கரை லட்சுமி நகரில் காகிதத்தில் எழுதிய 3 நம்பா் லாட்டரி சீட்டு விற்ற அதே பகுதியைச் சோ்ந்த பாலசுப்பிரமணியத்தை (35) போலீஸாா் கைது செய்தனா்.