தாராபுரத்தில் 382 பயனாளிகளுக்கு ரூ.52.95 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

தாராபுரத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 382 பயனாளிகளுக்கு ரூ.52.95 லட்சம் மதிப்பிலான

தாராபுரத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 382 பயனாளிகளுக்கு ரூ.52.95 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி வெள்ளிக்கிழமை வழங்கினார்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், மணக்கடவு சாரா கல்லூரியில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி 382 பயனாளிகளுக்கு ரூ.52.95 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசியதாவது:
தமிழக அரசு சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுமக்களை இணைக்கும் வகையில் ஒவ்வொரு மாதமும் மக்கள் தொடர்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
மணக்கடவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு தகுதியுடைய மனுதாரர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. மேலும், மீதமுள்ள மனுக்களின் மீதும் உரிய விசாரணை நடத்தி தீர்வு காணப்படும் என்றார்.
 இந்த முகாமில் வருவாய் துறையின் சார்பில் 51 பயனாளிகளுக்கு ரூ.12.49 லட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனைப் பட்டாவும், 100 பயனாளிகளுக்கு ரூ.9.76 லட்சம் மதிப்பில் முதியோர் மற்றும் இதர உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 
நிகழ்ச்சியில், தாராபுரம் சார் ஆட்சியர் கிரேஷ் பச்சாவு, கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இயக்குநர் ராஜேந்திரன், உதவி இயக்குநர் பாலசுப்பிரமணியன், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் ராகவேந்திரன், தாராபுரம் வட்டாட்சியர் சிவகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com