கொடிகாத்த குமரன் நினைவு தினம் அனுசரிப்பு

திருப்பூரில் சுதந்திரப் போராட்ட தியாகி கொடிகாத்த குமரனின் 87ஆவது நினைவு தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது

திருப்பூரில் சுதந்திரப் போராட்ட தியாகி கொடிகாத்த குமரனின் 87ஆவது நினைவு தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
திருப்பூரில் கொடிகாத்த குமரனின் நினைவு தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. 
இதில், குமரன் சாலையில் உள்ள அவரது நினைவிடத்தில் தியாகிகள், பள்ளி மாணவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். 
அவர் உயிர்நீத்த இடத்தில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நகரத் தலைவர் ஆர்.கிருஷ்ணன் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். 
பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் தொழிற்சங்கத்தினரும் அஞ்சலி செலுத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com