வெள்ளக்கோவில் அருகே புதுப்பையில் நடந்த சாலை விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
மூலனூர் சாலையில் உள்ள சுப்பிரமணியக்கவுண்டன்வலசைச் சேர்ந்தவர் சக்திவேல் மகன் எஸ்.கனகராஜ் (27).
இவர் மோட்டார் சைக்கிளில் புதுப்பை சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்துள்ளார். அப்போது வெள்ளக்கோவில் சாலை தங்கமேடு அருகே எதிரே வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த அவர் ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வெள்ளக்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.