திருப்பூர் அருகே முதலிபாளையம் ஊராட்சியில் உள்ள மாணிக்காபுரம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்க இயக்குநர்கள் 4 பேர் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளனர்.
மாணிக்காபுரம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத்தின் இயக்குநர்களான எம்.காந்திமதி (சிபிஎம்), பி.ஈஸ்வரி (திமுக), பி.நாச்சிமுத்து (திமுக), ஜி.சரவணமுத்து (தமாகா) ஆகிய 4 பேரும் தனித்தனியாக ராஜிநாமா கடிதத்தை மாணிக்காபுரம் கூட்டுறவு சங்கத் தலைவருக்கு திங்கள்கிழமை அனுப்பி வைத்துள்ளனர்.
இதில், மாணிக்காபுரம் கூட்டுறவு வங்கியில் தாங்கள் முறையாக தேர்ந்தெடுக்கப்படவில்லை. அதற்குக் காரணம் தேர்தல் முறையாக நடைபெறவில்லை. எனவே, இயக்குநர் பொறுப்பில் இருந்து ராஜிநாமா செய்வதாகத் தெரிவித்துள்ளனர்.