திருப்பூர் மாவட்டத்தில் சுதந்திர தின விழா விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக முதல்வரால் வழங்கப்பட உள்ள சுதந்திர தின விழா விருதுக்கு பெண்களுக்காக சிறந்த முறையில் சமூக சேவை புரிந்த நபர்கள்(ஆண், பெண் இருபாலர்), நிறுவனங்கள் உரிய ஆவணங்களுடன் ஜூன் 17ஆம் தேதி மாலை 5 மணிக்குள் திருப்பூர் மாவட்ட சமூகநலத் துறை அலுவலகத்தில் உரிய படிவம் பெற்று விண்ணப்பிக்கலாம்.