அவிநாசியில் இளைஞர் தூக்கிட்டு செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.
அவிநாசி, சேவூர் சாலை கான்வென்ட் வீதியைச் சேர்ந்த சாமிநாதன் மகன் கேசவமூர்த்தி(27). இவர் கடந்த சில மாதங்களாக உடல்நலம் சரியில்லாமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் இவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவிநாசி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.