திருப்பூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை (ஜூன் 26) விவசாயிகள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது என கோட்டாட்சியர் சு.செண்பகவல்லி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருப்பூர் கோட்டத்துக்கு உள்பட்ட திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், ஊத்துக்குளி மற்றும் அவிநாசி வட்டத்துக்கு உள்பட்ட விவசாயிகளுக்கான குறை தீர் முகாம் கோட்டட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெறுகிறது. இதில் விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த பிரச்னைகள் தொடர்பாக மனு அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.